சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மத்தியபிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்: ஆதாரத்தை வெளியிட்டது காங்கிரஸ் 

மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :3 ஜூன் 2018, 6:24 pm IST

புதுதில்லி: மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரவிருக்கும் தேர்தலில் குளறுபடி செய்ய ஆளும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் பேர் வரை போலி வாக்காளராக சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளோம். வாக்காளர் பட்டியலில் வேண்டுமென்றே பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிர்வாகத்தின் கவனக்குறைவு அல்ல, நிர்வாகத்தின் தவறான செயல்பாடு எனக் கூறிய கமல்நாத், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இங்குள்ள பாஜக அரசை வீழ்த்த அனைத்து எதிர்கட்சியினரும் ஒன்று சேர முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். 

10 ஆண்டுகளில் மக்கள் தொகை 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது, ஆனால், எல்லா தொகுதிகளிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் என நாங்கள் பட்டியலிட்டுள்ளோம் என்றும் ஒரு வாக்காளரின் பெயர் 26 இடங்களில் வாக்காளர் பட்டியல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாதத்தில், மத்திய தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து ஆறு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சலினா சிங் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.