வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உள்நோக்கத்துடன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது: வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி

உள்நோக்கத்துடன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது என்று கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர்

News image
Updated On :1 மார்ச் 2018, 10:24 am

DIN

உள்நோக்கத்துடன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது என்று கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வாதம் புரிந்தார். 

ஐ.என்.எக்ஸ். ஊடகம் தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர். பின்னர் தில்லி பாட்டியாலா வளாகத்தில் உள்ள பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சுமீத் ஆனந்த் முன்பு கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். கார்த்தி சிதம்பரத்துக்கு அவரது வழக்குரைஞருடன் பேச 10 நிமிட நேரம் நீதிபதி அவகாசம் அளித்தார். தில்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது 'இதுவொரு அரசியல் பழிவாங்கும் செயலாகும்; இதை நான் நிரூபிப்பேன்' என்றார் கார்த்தி.

கார்த்தியை கைது செய்தது ஏன் என்று சி.பி.ஐ. விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  சி.பி.ஐ. விசாரணைக்கு கார்த்தி ஒத்துழைப்பு அளித்தாகவும் அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இன்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.