இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

காஷ்மீரில் இன்று உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று திங்கள்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :8 அக்டோபர் 2018, 8:35 am IST


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று திங்கள்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. 

ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் "ஜம்மு காஷ்மீரில் 13 ஆண்டுகளுக்கு பிறகு 1,145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) 422 வார்டுகளுக்கு முதல்முறையாக மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்குப்பதிவு இன்று திங்கள்கிழமை காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜம்முவில் 247, காஷ்மீரில் 149, லடாக்கில் 26 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அவற்றில் மொத்தமாக 1,283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜம்முவில் 584, ரஜெளரியில் 61, பூஞ்ச் மாவட்டத்தில் 26 என மொத்தம் 671 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு மாநில அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தலையொட்டி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டு உள்ள 26 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளும் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக், ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையது அலி ஷா கிலானி ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2-ஆம் தேதி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மிதவாத ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபரூக் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த 3 பிரிவினைவாத கட்சித் தலைவர்களும் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்களுக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் அனைவரும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.