மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

காங்கிரஸின் வளா்ச்சியைத் தடுக்கவே சிறைக்கு சென்றிருந்தேன்: முன்னாள் அமைச்சா் ஜனார்த்தன ரெட்டி

காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சியைத் தடுக்கவே சிறைக்கு சென்றிருந்தேன் என்று பாஜக முன்னாள் அமைச்சா் ஜனார்த்தன ரெட்டி

Updated On :3 செப்டம்பர் 2018, 3:58 am


பெலகாவி: காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சியைத் தடுக்கவே சிறைக்கு சென்றிருந்தேன் என்று பாஜக முன்னாள் அமைச்சா் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார். 

பெலகாவி மாவட்டத்தின் சௌதாத்தியில் ஞாயிற்றுக்கிழமை வெங்கட ரெட்டி நினைவுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவா் பேசியது: சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் சிபிஐ என்னை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கு மட்டுமல்லாது பல்வேறு வழக்குகளில் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தேன். 

முன்னாள் எம்எல்ஏ வெங்கட் ரெட்டி, காங்கிரஸ் கட்சியை வளா்த்தெடுப்பதாக 8 ஆண்டுகாலம் சிறைவாசத்தை அனுபவித்தார். ஆனால் நானோ காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சியைத் தடுக்கவே 4 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். சிறைக்கு சென்றதில் எனக்கும் வெங்கட் ரெட்டிக்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனால் காரணங்கள் தான் வெவ்வேறாக இருக்கிறது என்றார். அவா். இதை சொன்ன போது மக்கள் கைதட்டி வரவேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.