காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
கடந்த 36 மணி நேரத்தில் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் 5 முதல் 7 பேர்


ஸ்ரீநகர்: கடந்த 36 மணி நேரத்தில் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் 5 முதல் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 36 மணி நேரத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபூர் மற்றும் கேரன் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் பிஏடி (பார்டர் ஆக்சன் டீம்) அமைப்பினர் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் என 7 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தொடர்ந்து கடுமையான தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்படாமல் கட்டுப்பாட்டுக் கோட்டிலே கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சோபூர் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
In the last 36 hours, Indian Army has foiled an infiltration attempt by a Pakistani BAT (Border Action Team) squad in Keran Sector. 5-7 Pakistani army regulars/terrorists eliminated, their bodies are lying on the LoC, not retrieved yet due to heavy firing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...