கடலூர்: திமுகவில் தொண்டர்கள் யாரும் தலைவராக வர முடியாது என்று திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது பால் விலை உயர்வை அரசியலாக்குவது வேடிக்கையாக உள்ளது.
இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீருக்கு பாகிஸ்தான் உரிமை கோருவதை திமுக ஆதரிக்கிறதா? என சந்தேகம் எழுகிறது என்றவர், திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றார்.
மேலும், காமராஜர் அறிவுரையை கேட்டு வளர்ந்ததாக கூறும் ஸ்டாலின், அவருக்கு மெரினாவில் ஏன் நினைவிடம் அமைக்கவில்லை. மூப்பனார் பிரதமராவதை தடுத்ததும், அப்துல்கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராவதை எதிர்த்ததும் திமுக தான். திமுகவில் தொண்டர்கள் யாரும் தலைவராக வர முடியாது என கூறினார்.