ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 நாட்களில் ரூ.29,000 கோடி உயர்வு

ஆசியாவின் கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2

News image
Updated On :19 ஆகஸ்ட் 2019, 8:07 am

DIN


ஆசியாவின் கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 நாட்களில் ரூ.29,000 கோடியாக உயர்ந்துள்ளதை அடுத்து அவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 13 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த வாரம் திங்கள்கிழமை மும்பையில் நடைபெற்றது. அப்போது ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ரசாயனப் பொருட்களின் 20 சதவீத பங்குகளை சவூதி அரேபியாவைச் சேர்ந்த அராம்கோ நிறுவனத்துக்கு விற்பதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன்களை அடுத்த 18 மாதங்களுக்குள் முற்றிலும் குறைக்க திட்டமிடப்பட்டது. அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஜியோ ஃபைபர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11 சதவீதம் உயர்ந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 நாட்களில் ரூ. 29,000 கோடிக்கு உயர்ந்துள்ளது. 

ஆண்டு கூட்டத்திற்கு முன்பு நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.1,162 கோடியாக இருந்தது. ஆண்டு கூட்டம் முடிந்த 2 நாட்களில் கடந்த புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ரூ.1,288.30 கோடியாக உயர்ந்தது. இதனால் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.28.684 (4 பில்லியன் டாலர்) கோடியாக உயர்ந்துள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 49.9 பில்லியன் டாலர். ஆசியாவின் கோடீஸ்வரர் ஒரு ஆண்டின் அடிப்படையில் 5.57 டாலர்களை ஈட்டியுள்ளார். இதனால் உலகப் பணக்காரர்கள் வரிசையில் அவர் 13 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற "டைம்' பத்திரிகை, "2019-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்கவர்களின்' பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.