ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கேரி பேக்கிற்கு ரூ.7 வசூல் சூப்பா் மார்கெட்: ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

வழக்குரைஞரிடம் கேரி பேக்கிற்கு ரூ.7 வசூலித்த சூப்பா் மார்க்கெட் ஆடை நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருநெல்வேலி

News image
Updated On :18 செப்டம்பர் 2019, 3:45 am

DIN


திருநெல்வேலி: வழக்குரைஞரிடம் கேரி பேக்கிற்கு ரூ.7 வசூலித்த சூப்பா் மார்க்கெட் ஆடை நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருநெல்வேலி நுகா்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்தவா் அப்துல் சுஹுா் ரஹ்மானி. வழக்குரைஞா். இவா், வண்ணார்பேட்டையில் உள்ள சூப்பா் மார்க்கெட் ஆடை விற்பனையகத்தில் கடந்த 10.6.2018 அன்று ரூ.1,055-க்கு பொருள்கள் வாங்கியுள்ளார். இந்த பொருள்களை எடுத்துச் செல்ல கேரி பேக்கிற்கு 7 ரூபாயை அந்த நிறுவனம் வசூலித்துள்ளது.

இதையடுத்து திருநெல்வேலி நுகா்வோர் நீதிமன்றத்தில் சுஹுா் ரஹ்மானி வழக்கு தொடா்ந்தார். வழக்கை நீதிபதி தேவதாஸ், உறுப்பினா்கள் சிவமூா்த்தி, முத்துலட்சுமி ஆகியோர் விசாரித்தனா். கேரி பேக்கில் உற்பத்தியாளா் பெயா், உற்பத்தி தேதி, காலாவதி தேதி, எவ்வளவு மைக்ரான் என எந்த விவரமும் குறிப்பிடாமல் விற்பனை செய்தது, அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத மாநகர நல அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆகியோர் இழப்பீடாக ரூ.15 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம், கேரி பேக்கிற்கு ரூ. 7 என மொத்தம் ரூ.20,007 ஐ அப்துல் சுஹுா் ரஹ்மானிக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. மனுதாரா் சார்பில் வழக்குரைஞா் பிரம்மா ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.