விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தேஜஸ் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'தேஜஸ்' போர் விமானத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று

News image
Updated On :19 செப்டம்பர் 2019, 5:58 am


பெங்களூரு: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'தேஜஸ்' போர் விமானத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (செப்.19) பயணித்தார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனமான ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (எச்ஏஎல்) முற்றிலும் உள்நாட்டிலேயே, தேஜஸ் ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படை, ஏற்கெனவே, 40 தேஜஸ் ரக விமானங்களை வாங்குவதற்கு, 'ஆர்டர்' கொடுத்துள்ளது. சமீபத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, மேலும், 80 விமானங்களை வாங்கவும், ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

Story image

இந்நிலையில், கடற்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட, தேஜஸ் விமானத்தை, வெற்றிகரமாக தரையிறக்கும் சோதனை முயற்சி, சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது. இந்த விமானம் மணிக்கு 2,005 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மிக் -21 ரக விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி கிடைத்ததை அடுத்து, தேஜஸ் போர் விமானத்தில் பயணிப்பதற்காக தில்லியில் இருந்து பெங்களூரு வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெங்களூரில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து தேஜஸ் போர் விமானத்தில் பயணிப்பதற்கான உடைகளை அணிந்துகொண்டு தயார் ஆனார். 

Story image

பின்னர் தேஜஸ் விமானத்தில் ஏறிய ராஜ்நாத் சிங் சுற்றியிருந்தவர்களை பார்த்து கைகளை அசைத்து பின்னர் விமானத்தில் பயணித்தார். தேஜஸ் போர் விமானத்தில் அவருடன் விமான படை துணைத் தளபதி என். திவாரியும் சென்றார்.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தேஜஸ் விமானத்தில் 30 நிமிடம் பயணித்தார். இதன்மூலம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானத்தில் பயணித்த நாட்டின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.