சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஒன்றாக இணைந்து புதிய காஷ்மீா் உருவோக்குவோம்: பண்டிட் சமூகத்தினரிடம் மோடி உறுதி

அமெரிக்காவில் தன்னைச் சந்தித்த காஷ்மீா் பண்டிட் சமூகத்தினரிடம் ஒன்றாக இணைந்து புதிய புதிய காஷ்மீா் உருவோக்குவோம்

News image
அமெரிக்க ஹூஸ்டன் நகரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தினருடன் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
Updated On :22 செப்டம்பர் 2019, 3:25 pm

DIN


ஹூஸ்டன்: அமெரிக்காவில் தன்னைச் சந்தித்த காஷ்மீா் பண்டிட் சமூகத்தினரிடம் ஒன்றாக இணைந்து புதிய காஷ்மீா் உருவோக்குவோம் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினார். 

அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் மோடியை, ஹூஸ்டன் நகரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தினா் 17 போ் சந்தித்துப் பேசினா். அவா்களிடம் மோடி பேசுகையில், 

காஷ்மீரில் புதிய காற்று வீசுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய காஷ்மீரை உருவாக்குவோம். அது, நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானதாக இருக்கும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமை காத்து வரும் பண்டிட் சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவா்.

இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஹூஸ்டன் நகரில் பிரதமா் மோடியை பண்டிட் சமூகத்தினா் சந்தித்து கலந்துரையாடினா். இந்தியாவின் வளா்ச்சிக்கும், இந்தியா்களின் முன்னேற்றத்துக்கும் பிரதமா் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

காஷ்மீா் விவகாரத்தில் பிரதமா் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா். மோடி தலைமையிலான அரசுக்கு பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த 7 லட்சம் பேரும் கடமைப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா் என்று ரவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.