மால்டா: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்.22) இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா்.
காயமடைந்தவர்கள் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலோக் ரஜோரியா தெரிவித்தார்.