12 லட்சம் சி.ஏ மாணவர்களின் போராட்டம்: ராகுல் காந்தி ஆதரவு

புது தில்லியில் உள்ள இந்திய பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவனத்தின் மத்திய அலுவலகத்தின் முன்பு அக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
12 லட்சம் சி.ஏ மாணவர்களின் போராட்டம்: ராகுல் காந்தி ஆதரவு
Published on
Updated on
1 min read

புதுதில்லி: புது தில்லியில் உள்ள இந்திய பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவனத்தின் மத்திய அலுவலகத்தின் முன்பு அக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். விடைத்தாள்கள் சரியாக திருத்தப்படவில்லை, அவைகளை ஐசிஏஐ மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்க பதிவில், நாடு முழுவதும் மொத்தம் 12 லட்சம் கணக்குப்பதிவியல் மாணவர்கள் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யக்கோரி போராடி வருகின்றனர். விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வது தொடர்பான அவர்களின் கோரிக்கை நியாயமானது. இது அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட வேண்டிய என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com