ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அமர் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்

சமஜ்வாத் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான அமர் சிங்கிற்கு இந்திய ரானுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

News image
அமர் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்
Updated On :3 ஆகஸ்ட் 2020, 6:33 am

DIN

சமஜ்வாத் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான அமர் சிங்கிற்கு இந்திய ரானுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சமஜ்வாத் கட்சியின் மூத்த தலைவர் அமர் சிங் (வயது 64). இவர் மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால்  சிங்கப்பூரில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி சிங்கப்பூரில் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரில் இருந்து ஞாயிற்றுக் கிழமை அவரது உடல் இந்தியா கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்திய ரானுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.