டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போடியில் பலத்த சூறைக்காற்றால் வீடுகள், மின்கம்பங்கள் சேதம்: தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

போடியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் வீடுகள், மின் கம்பங்கள் சேதமடைந்தன. இரவு விட்டு விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

News image
சூறைக்காற்றில் சாய்ந்த மரங்கள்
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

DIN


போடி: போடியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் வீடுகள், மின் கம்பங்கள் சேதமடைந்தன. இரவு விட்டு விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

     போடியில் கடந்த சில நாள்களாகவே லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் புதன்கிழமை காலை முதலே பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கியது. மாலையில் சூறைக்காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இரவு முழுவதும் சூறைக்காற்று தொடர்ந்து வீசியதில் போடி சிலமலை, சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. மணியம்பட்டி, சூலப்புரம் கிராமங்களில் பல வீடுகள் சேதமடைந்தன. 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

     போடி நகர் மற்றும் கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போடி நகர் பகுதியில் புதன் கிழமை காலை முதல் வியாழன் கிழமை காலை வரை விட்டு விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் விட்டு விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், உயர்வழுத்த மின்சாரமும், தாழ்வழுத்த மின்சாரமும் என மாறி மாறி மின்விநியோகம் செய்யப்பட்டது. இதனால் மின்சாதன பொருட்கள் பழுதடையும் சூழல் ஏற்பட்டது.

     வியாழக்கிழமை பகலிலும் தொடர்ந்து சூறைக்காற்று வீசியதில் சூலப்புரம், சிலமலை கிராமங்களில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்து விழுந்தன. மரங்களும் சாய்ந்தது. இதனிடையே மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.