வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மகாராஷ்டிரம்: கடலில் தத்தளித்து வந்த 16 மீனவர்கள் மீட்பு

மகாராஷ்டிரத்தில் தானே கடல்பகுதியில் சிக்கித்தவித்து வந்த 16 மீனவர்களை மும்பையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் பத்திரமாக மீட்டது. 

News image
மகாராஷ்டிரம்: கடலில் தத்தளித்து வந்த 16 மீனவர்கள் மீட்பு
Updated On :7 ஆகஸ்ட் 2020, 10:53 am

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் தானே கடல்பகுதியில் சிக்கித்தவித்து வந்த 16 மீனவர்களை மும்பையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மீட்டு வந்ததாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக  தொடர் மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் அதிவேக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் கடலுக்கு சென்ற படகு ஒன்று அதிவேக  காற்று மற்றும் கடல்சீற்றத்தால் தத்தளித்துக்கொண்டு இருந்தது.

இது குறித்த செய்தி  மும்பையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அர்னாலா துறைமுக பகுதியில் இருந்த படகுகளுக்கு இந்த தகவல் பரிமாற்றப்பட்டது. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் தொடர் முயற்சியால் 70 கிலோமீட்டருக்கு அப்பால் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 16 மீனவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் மும்பைக்கு பத்திரமாக அழைத்துவரப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.