இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர் சுட்டுக்கொலை
இந்திய எல்லைப் பகுதியான பார்மரில் அத்துமீறி ஊடுருவ முயன்றவரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.


இந்திய எல்லைப் பகுதியான பார்மரில் அத்துமீறி ஊடுருவ முயன்றவரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
இன்று அதிகாலை 1 மணியளவில் பார்மரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஒரு நபர் இந்திய எல்லைப் பகுதிக்குள் உள்ள வேலியை ஏறி குதித்தார்.
பின், அவர் அங்கிருந்து மறுபக்கம் ஓட முயன்றார். இதைக் கண்ட எல்லை ரோந்து படையினர் அவரை சுட்டுக் கொன்றனர்.
மேலும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்ப்பட்டோர் கையில் வைத்திருந்த விளக்குகளால் ஒளி எழுப்பியதை எல்லையோர ரோந்து படையினர் பார்த்துள்ளனர்.
சுதந்திர நாள் வருவதால் அதைக் குறி வைத்து ஏதேனும் சதிச் செயலில் ஈடுபடுவதற்காக ஊடுருவ முயற்சி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...