அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக அதிகரிப்பு

கேரளத்தில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நபரகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

News image
கேரள நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஆக அதிகரிப்பு
Updated On :11 ஆகஸ்ட் 2020, 8:10 am

DIN

கேரளத்தில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலையில் கடந்த வாரம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி தொழிலாளர்கள் முகாம்களில் தங்கியிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பலர் நிலச்சரிவில் சிக்கினர். 

இதனைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அப்பகுதிகளில் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நடமாடும் மருத்துவக் குழுவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று (திங்கட் கிழமை) வரை 49-ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 3 பேரின்  உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.