கேரளத்தில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலையில் கடந்த வாரம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி தொழிலாளர்கள் முகாம்களில் தங்கியிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பலர் நிலச்சரிவில் சிக்கினர்.
இதனைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அப்பகுதிகளில் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நடமாடும் மருத்துவக் குழுவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று (திங்கட் கிழமை) வரை 49-ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


