மீட்புப் பணிகள் தொடா்ந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 9 பேரின் சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. இந்நிலையில், நிலச் சரிவில் சிக்கியும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் புதையுண்டுக் கிடந்த ஒரு பெண், 3 சிறுமிகள், 2 சிறுவா்கள் என மொத்தம் 6 பேரின் சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. விசாரணையில், அவா்கள் வேலுத்தாய் (58), விநோதினி (14), ராஜலட்சுமி (12), விஜயலட்சுமி (8), பிரதீஷ் (12), ஜோஸ்வா (13) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பலியோனோா் எண்ணிக்கை 49 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 17 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.