வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருச்சியில் தூக்குக் கயறு மாட்டி வாகன ஓட்டுநர்கள் போராட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூக்குக் கயிறு மாட்டி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
திருச்சியில் தூக்குக் கயறு மாட்டி வாகன ஓட்டுநர்கள் போராட்டம்
Updated On :12 ஆகஸ்ட் 2020, 6:47 am

DIN

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூக்குக் கயிறு மாட்டி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல ஓட்டுநர்களின் இறப்பிற்குப் பிறகும் மௌனம் காட்டும் தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இஎம்ஐ கால அவகாசம் நீட்டிக்க வேண்டும், வட்டி விகிதத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினர்.

மேலும், ஆர்டிஓ சம்பந்தப்பட்ட ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும், இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை ஏற்றத்தை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூக்குக் கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.