காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 37 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கேரளம், கர்நாடகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதை போன்று, தற்போது நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சிந்துபால்கோக் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 30-க்கும் அதிகமான வீடுகள் நிலத்தில் மறைந்தன.
இது குறித்து தகவல் அறிந்து பாதுகாப்புப் படை குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் இதில் காணாமல் போன 37 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவ் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் மீட்பு படையினரை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஏணிப் படிகளில் மாந்தர்கள்!

முதல் டி20 போட்டி: நியூசி.யை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
இனிப்பில் தங்கிய கசப்பு

அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

