மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி, 37 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 37 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

News image

நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி, 37 பேர் மாயம்

Updated On :14 ஆகஸ்ட் 2020, 9:32 am

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 37 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கேரளம், கர்நாடகத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதை போன்று, தற்போது நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சிந்துபால்கோக் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 30-க்கும் அதிகமான வீடுகள் நிலத்தில் மறைந்தன.

இது குறித்து தகவல் அறிந்து பாதுகாப்புப் படை குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் இதில் காணாமல் போன 37 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவ் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் மீட்பு படையினரை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.