மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக சரிவு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்ததால் நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்தது.


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்ததால் நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்தது. தற்போது மழை தணிந்து உள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
நேற்று காலை 98.59 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99 அடியாக உயர்ந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 13 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 63.55 டிஎம்சி ஆக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...