மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக சரிவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்ததால் நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்தது.

News image
மேட்டூர் அணை
Updated On :15 ஆகஸ்ட் 2020, 5:53 am

DIN


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்ததால் நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்தது. தற்போது மழை தணிந்து உள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது. 

நேற்று காலை 98.59 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99 அடியாக உயர்ந்தது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 13 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 63.55 டிஎம்சி ஆக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.