ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் ராஜிவ் குமார்

இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லாவாசா பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து புதிய தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார்
Updated On :22 ஆகஸ்ட் 2020, 9:29 am

DIN

இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லாவாசா பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து புதிய தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அசோக் லாவாசா ஆசிய வங்கியின் துணைத்தலைவராக தேர்வானதால் தன் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் பொது நிறுவனத் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜிவ் குமார் தற்போது தேர்தல் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் 1984-ல் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து இந்திய ஆட்சி பணியில் தேர்வானார்.  நிதி அமைச்சகம் மற்றும் பணியாளர் அமைச்சகத்தில் அதிகளவில் பணியாற்றியவர். 10 பொதுத்துறை வங்கிகளை 4 ஆக இணைத்ததில் இவரது பங்கு பெரியது.

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முன்னெடுத்த அனைத்து நிதித்துறை திட்டங்களையும் முன் நின்று செயல்படுத்தியதால் அரசின் நம்பிக்கையைப் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.