மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் பலத்த மழை : வெள்ள அபாயம்

ஒடிசாவின் பத்ரகில் பலத்த மழை பெய்து வருவதால் பைதாராணி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

News image
ஒடிசாவில் பலத்த மழை
Updated On :27 ஆகஸ்ட் 2020, 6:12 am

ANI

ஒடிசாவின் பத்ரகில் பலத்த மழை பெய்து வருவதால் பைதாராணி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பைதராணி மற்றும் பிற ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

இதையடுத்து, பைதராணி ஆற்றொர கிராமமான சதுர்பூஜ்பூர், ஹஸ்னாபாத் மற்றும் பண்டரிபோகாரி கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இங்குள்ள பகுதிகளில் வெள்ள நீர்  இடுப்பளவு சூழ்ந்துள்ளதால் மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.

மேலும் புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை, ஒடிசா தலைமைச் செயலாளர் ஆசித் திரிபாதி தலைமையில், 12 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் மழை மற்றும் வெள்ள சூழ்நிலைகளைக் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாலசூர், மயூர்பஞ்ச், பத்ராக், ஜஜ்பூர், கேந்திரபாரா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய இடங்களில் ஒடிசா பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களையும் மாநில அரசு அனுப்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.