ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு
வடக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் இடிந்து விழுந்த வீடுகள்

வடக்கு ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் இடிந்து விழுந்த வீடுகள்
வடக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாண மற்றும் பிற பகுதிகளில் செவாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்சரிவில் இடிந்து விழுந்துள்ளது.
இதில், பர்வான் மாகாணம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பில் பர்வானில் மட்டும் 110 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிக்கையில்,
வெள்ளத்தால் நாடு முழுவதும் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 250 க்கும் மேற்பட்ட மக்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பர்வான் மாகாணத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிள்ளனர்.
கோடை காலங்களில், பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மழைப் பெய்வதால் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...