மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசா வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

ஒடிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கி இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

News image

ஒடிசா வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

Updated On :29 ஆகஸ்ட் 2020, 6:13 am

ஒடிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கி இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் குமார் கூறிகையில்,

ஒடிசாவில் பார்கர், நுவாபாடா, ஜஜ்பூர், பலேஸ்வர் மற்றும் பத்ராக் ஆகிய இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததில் மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கு முன் மயூர்பஞ்ச், கியோஞ்சர் மற்றும் சுந்தர்கர் ஆகிய இடங்களில் 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்கர் மற்றும் மயூர்பஞ்சில் பகுதியில் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மேலாண்மை மீட்புப் படை மற்றும் தீயணைப்பு வீரர்களைச் சேர்ந்த 39 குழுக்கள் பணியில் உள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் இன்று வந்துள்ளனர் என கூறினார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்த தகவல்களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.