நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஸ்ரீநகரில் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற காரைத் தேடும் பணி தீவிரம்

ஸ்ரீநகர் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற காரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 டிசம்பர் 2020, 12:19 pm

ANI

ஸ்ரீநகர் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற காரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரின் புறநகரான நர்பால் சோதனைச் சாவடியில் காவல்துறை திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த காரை காவல்துறையினர் நிறுத்த முயன்றனர், ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றதால் அப்பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு காரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீநகர் மேற்கு காவல் கண்காணிப்பாளர் ஷாஜாத் சலாஹி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பயங்கரவாத நடவடிக்கையை கண்காணிக்கும் அடிப்படையில் தடுப்பு வைத்து சோதனை செய்து வந்தோம். இவ்வழியே வந்த காரை நிறுத்த முயன்றபோது, அந்த கார் நிற்காமல் சென்றது.

இதைத்தொடர்ந்து, இப்பகுதியை காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.