நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2020, 9:46 am

PTI

ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தின் பாபா குண்ட் கலீல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையின்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் ஜாகீர் அப்பாஸ் லோன் என்ற தீவிரவாதியின் அடிவயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.