

தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,
பால்வளத்துறை ஆணையர் வள்ளலார், தொழிலாளர்துறை ஆணையராகவும், தொழிலாளர்துறை ஆணையர் நந்தகோபால், பால்வளத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில திட்ட கூடுதல் இயக்குநராக அமிர்தா ஜோதியும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலாளராக கற்பகத்தையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை இயக்குநராக கமல் கிஷோர் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.