/

புணேவில் ஜன.4 முதல் பள்ளிகள் திறப்பு

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு புணேவில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 6:12 pm

ANI

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு புணேவில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின், மத்திய அரசு படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், புணே மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.