மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவிற்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா நோய்த் தொற்றால் மத்திய உள்துறை அமைச்சர் உள்பட நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில்,
கரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறி தெரிந்ததையடுத்து, சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்துவர்களின் ஆலோசனைப்படி, நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். மேலும், கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.