தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவிற்கு கரோனா

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவிற்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

படம்: டிவிட்டர் - அஸ்வினி குமார் செளபே

Updated On :28 டிசம்பர் 2020, 2:25 pm

ANI

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவிற்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா நோய்த் தொற்றால் மத்திய உள்துறை அமைச்சர் உள்பட நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில்,

கரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறி தெரிந்ததையடுத்து, சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்துவர்களின் ஆலோசனைப்படி, நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். மேலும், கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.