கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் கடைகளில் பெயர்களை தமிழில் வைக்க துண்டுப்பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் பல கடைகள் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அரசாணையின்படி தமிழில் அமைக்கப் படுவதில்லை.
இந்நிலையில், ஆட்சிமொழி சட்ட வார விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை கம்பத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பெயர்ப்பலகைகளில் அரசாணைப்படி ஐந்து பங்கு தமிழ் எழுத்துக்களிலும், மூன்று பங்கு ஆங்கில எழுத்துக்களிலும், இரண்டு பங்கு இதர மொழிகளிலும் வைக்குமாறு வலியுறுத்தி அரசாணை சுற்றறிக்கையை துண்டு பிரசுரங்களாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இளங்கோ, தேனி மாவட்ட தமிழ் இயக்க செயலாளர் கவிஞர் பாரதன், கவிஞர் திராவிடமணி, பாரதி தமிழ் இலக்கியப்பேரவை சேதுமாதவன், புவனேஸ்வரி, பழனியம்ம்மாள், தர்மர், ராஜா ஊதிய மைய நூலககர்கள் மணிமுருகன், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


