சென்னை விமான நிலையத்தில் ஒருவர் கைது: தங்கம், வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.67.7 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.9 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றை சுங்கத்துறை


சென்னை விமான நிலையத்தில் ரூ.67.7 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.9 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விமானத்தில் பயணம் செய்து வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
அப்போது, பயணி ஒருவரிடம் நடத்திய சோதனையில் அவரிடம் இருந்து ரூ .67.7 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ தங்கம் மற்றும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாடு நாணயங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த தங்கக்கட்டிகளை முறையாக வாங்கியது பற்றியோ அல்லது இறக்குமதி செய்ததற்கான ஆவணமோ அவரிடம் இல்லை. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் உயரதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...