நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி

நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.
நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஏடிஎம் மையம் கல்வி நிறுவன வளாகத்தில் வெளியே அமைந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று பேர் சேர்ந்த கொள்ளை கும்பல் வெல்டிங் எந்திரம் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியின் போது ஏடிஎம் எந்திரம் தீப்பற்றி எரிந்துள்ளன. 

ஏடிஎம் எந்திரத்தில் இருந்த ரூ 2.51 லட்சம் ரொக்கம் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு எந்திரம் தீ வைக்கப்பட்டதா அல்லது கொள்ளை முயற்சியில் ஏடிஎம் எந்திரம் தீப்பற்றி எரிந்தது போனதா என்பது குறித்து சம்பவ இடத்தில் நேரில் சென்று புதுச்சத்திரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

சம்பவ இடத்தில் நாமக்கல் டிஎஸ்பி, காந்தி நேரில் விசாரணை நடத்தினார். முன்னதாக ஏடிஎம் எந்திரம் தீப்பற்றி எரிவது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com