நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொதுச் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

Updated On :23 ஜூலை 2020, 11:11 am

DIN

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தி கரோனா பரிசோதனை மையங்கள் அதிகப்படுத்த வலியுறுத்திய ஆர்ப்பாட்டமானது வியாழக்கிழமை நடைபெற்றது.

கேப்டன் லெட்சுமி நினைவு நாளையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கீழையூர் ஒன்றியத்தில் மூன்று இடங்களிலும், கீழ்வேளூர் ஒன்றியத்தில் இரண்டு இடங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தி கரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்திட வலியுறுத்தியும், பொதுமருத்துவம், பிரசவம் உள்பட வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்காமல் அளிக்க வேண்டும், தொற்று அதிகரிப்பிற்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதார பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், சுகாதார ஊழியர்கள் அனைவரும் அரசு அறிவித்தபடி ஊக்கத் தொகையை ஒரு மாத சம்பளமாக வழங்கி, மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணிபுரிய ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனை முன்பாக கீழையூர் ஒன்றியச் செயலாளர் கே.டி.எம். சுஜாதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் டி. லதா ஆர்ப்பாட்டம் தொடர்பான விளக்க உரை அளித்தார்.

இதேபோல திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை முன்பாக ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.மாலா தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சுசீலா ஆர்ப்பாட்ட விளக்கவுரை வழங்கினார்.  

பாலக்குறிச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.சித்ரா தலைமையில் ஒன்றிய‌ பொருளாளர் ஜி.சாந்தா‌ விளக்கவுரை வழங்கினார்.

கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட வலிவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக ஒன்றிய பொருளாளரும் ஆதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரான எஸ். அகிலா தலைமையில் ஒன்றிய துணைத் தலைவர் கிருஷ்ணவேணி விளக்கவுரை வழங்கினார்.

தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக ஒன்றிய குழு உறுப்பினர் கலையரசி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  ஒன்றிய செயலாளர் சுபாதேவி விளக்க உரை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.