கேப்டன் லெட்சுமி நினைவு நாளையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கீழையூர் ஒன்றியத்தில் மூன்று இடங்களிலும், கீழ்வேளூர் ஒன்றியத்தில் இரண்டு இடங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தி கரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்திட வலியுறுத்தியும், பொதுமருத்துவம், பிரசவம் உள்பட வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்காமல் அளிக்க வேண்டும், தொற்று அதிகரிப்பிற்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதார பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், சுகாதார ஊழியர்கள் அனைவரும் அரசு அறிவித்தபடி ஊக்கத் தொகையை ஒரு மாத சம்பளமாக வழங்கி, மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணிபுரிய ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.