விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூரில் ஆற்றில் மூழ்கிய பெண்ணைத் தேடும் பணி

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) சனிக்கிழமை காலை மூழ்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

News image
Updated On :25 ஜூலை 2020, 6:28 am

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) சனிக்கிழமை காலை மூழ்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மேல அலங்கத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி நீலாவதி (வயது 46). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

Story image

இந்நிலையில், வீரமணி 15 நாள்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக இறந்தார். இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நீலாவதி சனிக்கிழமை காலை பெரியகோயில் அருகேயுள்ள கல்லணைக் கால்வாயில் குதித்தார். 

இவர் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று அவரைத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.