நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஹார்விபட்டியில் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பரங்குன்றத்தை அடுத்த  ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி மக்கள் நல மன்றம் சார்பில் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

ஹார்விபட்டியில் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

Updated On :27 ஜூலை 2020, 12:31 pm

DIN

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பரங்குன்றத்தை அடுத்த  ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி மக்கள் நல மன்றம் சார்பில் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஹர்விபட்டி பூங்கா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  திருவுருவப் படத்திற்கு மன்ற தலைவர்  ஜி.அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மன்ற பொருளாளர் எஸ்.அண்ணாமலை, மன்ற துணைத் தலைவர் ஜி.காளிதாசன், மன்ற செயலாளர் டி.குலசேகரன், எல்.ஐ.சி எம்.கணேசன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.துளசிதாஸ், கந்தராஜ், மீனாட்சிசுந்தரம், மகுடபதி, வெங்கடசாமி, அ.அரவிந்தன், பிச்சம்  மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.