ஒடிசா மாநிலத்தில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளிவர இருந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவன் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிசா மாநிலம் பட்குரா காவல் நிலையத்திற்கு உள்பட்ட கோடபல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் மிரஞ்சன் (வயது 15). இவர் அருகேவுள்ள நைந்திபூர் உயர்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர். இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவர இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு தூங்க சென்ற மாணவன் காலை வெகுநேரம் ஆகியும் வெளிய வரவில்லை. மிரஞ்சனின் தாயார் அவனை எழுப்ப சென்ற போது அவன் கதவை திறக்காத்தால் கதவை உடைத்து உள்ளே சென்று சென்றுள்ளனர்.
அங்கு அவன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. உடனே அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
பட்குரா காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாணவனின் மரணம் குறித்து முழுமையான காரணம் தெரியாததால், காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


