ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆந்திரத்தில் 3 தலைநகரங்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

ஆந்திர மாநில வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களை நிறுவுவதற்கான மசோதாவிற்கு ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

News image
ஆந்திரத்தில் 3 தலைநகரங்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
Updated On :31 ஜூலை 2020, 12:12 pm

DIN

விஜயவாடா, ஜூலை 31 : ஆந்திர மாநில வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களை நிறுவுவதற்கான மசோதாவிற்கு ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் ஆளுநர் இந்த மசோதாவிற்கும், மூலதன பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தை ரத்து செய்யும் மற்றொரு முக்கியமான மசோதாவிற்கும் ஒப்புதல் அளித்தார்.

இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததால், ஆந்திர மாநிலத்திற்கு தற்போது மூன்று தலைநகரங்களாக மாற்ற அனைத்துத் தடைகளும் தகர்ந்தது. நிர்வாகத் தலைநகரமாக விசாகப்பட்டினம், நீதித்துறைத் தலைநகரமாக கர்னூல்  மற்றும் சட்டமன்றத் தலைநகரமாக அமராவதி நிறுவப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.