மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்திய-நேபாள எல்லைப் பிரச்னை விரைவில் பேசி முடிக்கப்படும்

நேபாளம் மற்றும் இந்தியா இடையிலான உறவை மனதில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை விரைவில் சுமூகமாக பேசி முடிக்கப்படும் என பா.ஜ.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜய் தம்தா தெரிவித்தார்.

News image

இந்திய-நேபாள எல்லைப் பிரச்சனை விரைவில் பேசி முடிக்கப்படும்

Updated On :31 ஜூலை 2020, 10:29 am

நேபாளம் மற்றும் இந்தியா இடையிலான உறவை மனதில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை விரைவில் சுமூகமாக பேசி முடிக்கப்படும் என பா.ஜ.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜய் தம்தா தெரிவித்தார்.

கடந்த ஜூலை 21 ம் தேதி நேபாள குடிமக்கள் இந்தியப் பகுதிக்குள் வந்து தோட்ட வேலைகளை மேற்கொண்டதாக இந்தியப் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதை அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

இது குறித்து தம்தாவிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறுகையில், 

தனக்பூர் எல்லையில் நேபாள மக்கள் ஊடுருவியது குற்றமாகும். இந்திய அரசு நிறுவனங்கள் தொடர்ந்து எல்லை பகுதியை கண்காணித்து வருகிறார்கள். 

நேபாளத்துடனான நெருங்கிய பாரம்பரிய மிக்க உறவுகளை மனதில் கொண்டு தேசிய நலனுக்கான சுமூகமாக தீர்வு விரைவில் பேசி முடிக்கப்படும் என்று தம்தா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.