கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதல்: மனமுடைந்த இளைஞர் தற்கொலை முயற்சி

விசாரணை, வழக்கு மற்றும் புகார் அளிக்க செல்பவர்களை அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது காவலர்களின் அராஜகத்தை காட்டுகிறது. 

News image
Updated On :17 ஜூன் 2020, 9:39 am

DIN

திருச்சுழி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் இடப்பிரச்னை காரணமாக அ.முக்குளம் காவல் நிலையம் சென்ற இளைஞரைக் காவலர்கள் தாக்கியதால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான சுப்ரமணியன், கிருஷ்ணன் ஆகியோரின் இடப் பிரச்னைக்காக செவ்வாய்க்கிழமை (ஜூன் 16)  அ.முக்குளம் காவல் நிலையம் சென்றதாக கூறப்படுகின்றது.

அவர்களுடன் முருகன் என்பவரும் உடன் சென்றுள்ளார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் முருகனைக் காவலர்கள் அடித்ததாகக்  கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்ததால் காரியாபட்டி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

அ.முக்குளம் காவலர்கள், விசாரணை, வழக்கு மற்றும் புகார் அளிக்க செல்பவர்களை அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது காவலர்களின் அராஜகத்தை காட்டுவதாக இந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதுபோன்று ஒரு சில காவலர்கள் நடந்து கொள்வதால் பொதுமக்களுக்கு காவலர்கள் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.