குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கம்பம் பூங்கா திடலில் காய்கறி கடைகள்: சமூக இடைவெளி கடைபிடிக்காததால் கரோனா அபாயம்

தேனி மாவட்டம் கம்பம் பூங்கா திடலில் உழவர் சந்தையை இடம் மாற்றியும், சாலையோர வியாபாரிகள் இடம் மாற்றாமல் இருப்பதால், கரோனா தொற்று அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

News image
Updated On :18 ஜூன் 2020, 9:56 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பூங்கா திடலில் உழவர் சந்தையை இடம் மாற்றியும், சாலையோர வியாபாரிகள் இடம் மாற்றாமல் இருப்பதால், கரோனா தொற்று அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கம்பத்தில் உழவர் சந்தை இடம் மாற்றப்பட்டு, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் உழவர் சந்தை அருகே சாலையோர வியாபாரிகள் இடம் மாற்றம் செய்யவில்லை, இதனால் காலை நேரங்களில், கூட்டம் சமூக இடைவெளி இல்லாமல் அலை மோதுகிறது. முககவசம் அணிவது இல்லை. சாலையோர காய்கனி கடைகளும் சமூக இடைவெளி இல்லாமல், நெருக்கமாக அமைத்து உள்ளனர். தேனி மாவட்ட நிர்வாகம் தொற்று பரவும் அபாயத்தை களைய சாலையோர காய்கனி கடை வியாபாரிகளை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.