பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 16-ஆவது நாளாக திங்கட்கிழமையும் உயா்த்தப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை குறைந்து அதன் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
அதனால், கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் கடந்த ஜூன் 6-ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன.
இந்நிலையில், 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் உயா்த்தி வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 16-ஆவது நாளாக திங்கட்கிழமையும் உயா்த்தப்பட்டது.
இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.29 பைசா அதிகரித்து 82.87 ரூபாய்க்கும் டீசல் 0.50 பைசா அதிகரித்து லிட்டருக்கு 76.30 ரூபாய்க்கும் விற்பனையானது.