ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற தூய்மைப் பணியாளர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :22 ஜூன் 2020, 7:51 am

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் நடராஜன்(60). தூய்மைப் பணியாளர். அவரது மகன் தமிழரசன். இருவரும் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் வந்தனர்.

திடீரனை நடராஜன் உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

 சாலை விபத்தில் காயமடைந்த அவரது மனைவி பூங்கோதையை சிகிச்சைக்காக திருச்சி தில்லைநகர் 6 வது கிராஸில் உள்ள தனியார் மருத்துவ மனையில் (ஸ்டார் கிங்ஸ்) சேர்த்தாராம். 

அவருக்கான சிகிச்சைக்கு காப்பீட்டு தொகை மூலம் கட்டணம் எடுத்துக்கொள்வதாக மருத்துவமனை நிர்வாகம் கூறினராம்.

 இந்நிலையில் பூங்கோதைக்கான சிகிச்சை காப்பீட்டில் வராது என மருத்துவமனை நிர்வாகம் கூறியதோடு முழு பணத்தை கட்டினால் தான் சிகிச்சை செய்ய முடியும் என கூறிவிட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக இருமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை இல்லை. 

எனவே விரக்தியில் இம்முடிவு எடுத்ததாக இருவரும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.