புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை விராலிமலை ஒன்றியம் பூதகுடி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் 6709 என்ற எண் கொண்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் முலம் நடத்தப்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் மதுபான கடையை திங்கள்கிழமை இரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கடையின் பணியாளர்கள் மற்றும் விராலிமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.