திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருச்சியில் தனிமை முகாமுக்கு எதிராக தொடரும் போராட்டம்!

திருச்சி மாநகரப் பகுதிகளில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்தவர்களை தங்க வைப்பதற்கான தனிமைப்படுத்தும் முகாம்களை பள்ளிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து

News image
Updated On :23 ஜூன் 2020, 8:14 am

DIN

திருச்சி: திருச்சி மாநகரப் பகுதிகளில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்தவர்களை தங்க வைப்பதற்கான தனிமைப்படுத்தும் முகாம்களை பள்ளிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கரோனா முன்னெச்சரிக்கையாக சென்னையில் இருந்து வந்தவர்களை திருவரங்கம், கிழக்கு சித்திரை வீதியில் உள்ள மாநகராட்சிப் பகுதியில் தங்க வைப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பள்ளி முன்பாக ஒன்று கூடி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் கலைந்துபோகச் செய்தனர். பள்ளியில் தனிமை முகாம் அமைக்கப்போவதில்லை என கூறி அனுப்பினர்.

இந்தநிலையில், செந்தண்ணீர்புரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சென்னை மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்களை தங்க வைப்பதற்கான தனிமை முகாம் அமைப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து செந்தண்ணீர்புரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேரந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தனிமை முகாம் அமைத்தால் தொற்று அபாயம் ஏற்படும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தனிமை முகாம் அமைக்கக் கூடாது என கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பள்ளி வாயில் முன்பாக செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப் பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.