விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூர் அருகே காரில் சென்றவர் கொலை

தஞ்சாவூர் அருகே வியாழக்கிழமை பிற்பகல் காரில் சென்றவர் வழி மறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :25 ஜூன் 2020, 2:18 pm

தஞ்சாவூர் அருகே வியாழக்கிழமை பிற்பகல் காரில் சென்றவர் வழி மறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் விளார் சாலை காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர் ஏ. யூசுப் (45). இவர் வல்லம் மேம்பாலப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத சிலர் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த யூசுப் நிகழ்விடத்திலேயே பலியானார். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில், யூசுப் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்ததும், அப்போது இலங்கையைச் சேர்ந்த அசிலா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்ததும் தெரியவந்தது. மேலும், இருவரும் காயிதே மில்லத் நகரில் வாழ்ந்து வந்தபோது தகராறு ஏற்பட்டு, தஞ்சாவூர் காவல் நிலைத்தில் அசிலாவால் புகார் செய்யப்பட்டுள்ளதும், இருவருக்கும் இரு ஆண்டுகளாகச் சொத்து பிரச்னை இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 

எனவே இதன் காரணமாக யூசுப் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அசிலா உள்ளிட்டோரை வல்லம் காவல் நிலையத்தினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.