புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவள்ளூர் அருகே கோயிலில் விட்டுச் செல்லப்பட்ட பச்சிளங்குழந்தை

திருவள்ளூர் அருகே கோயிலில் கூடையில் விட்டுச்செல்லப்பட்ட பிறந்து 10 நாள்களே பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. 

News image
Updated On :28 ஜூன் 2020, 12:18 pm

DIN

திருவள்ளூர் அருகே கோயிலில் கூடையில் விட்டுச்செல்லப்பட்ட பிறந்து 10 நாள்களே பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. 

திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கொட்டையூர் ஊராட்சியில் அடங்கிய நரசமங்கலம் கிராமம் உள்ளது. இந்த நிலையில் இக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெயில் வாட்டியதால் கோயில் மரத்தடியில் ஒதுங்கினார்களாம். அப்போது, அங்கு பச்சிளம் குழந்தை அழுகை சத்தம் கேட்டதாம். 

அதைத் தொடர்ந்து அருகில் சென்று பார்க்கையில் பிளாஸ்டிக் கூடையில் பிறந்த 10 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தோர் வட்டாட்சியர் விஜயகுமாரி மற்றும் மப்பேடு காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்களாம். அதன் பேரில் விரைந்து சென்ற வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் பச்சிளம் குழந்தையை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த நிலையில் பிறந்த சில நாள்களே ஆன ஆன குழந்தையை பிளாஸ்டிக் கூடையில் வைத்து விட்டுச் சென்ற பெண் மர்ம நபர் குறித்து மப்பேடு காவல் நிலைய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.