எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஈரான் துறைமுகத்தில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: போர்க்கால மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை

ஈரான் துறைமுகத்தில் நான்கு நாள்களாக தவிக்கும் தமிழக மீனவர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களை மீட்க இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :28 ஜூன் 2020, 5:53 am

DIN


ராமேசுவரம்: ஈரான் துறைமுகத்தில் நான்கு நாள்களாக தவிக்கும் தமிழக மீனவர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களை மீட்க இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் நாட்டில் இருந்து ஈரான் நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் தூத்துக்குடி, நாகை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் குஜராத், கேரளா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் 764 தமிழக மீனவர்கள்.

இந்நிலையில், நாடு முழுவதிலும் கரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் முடக்கப்பட்டது. இதனால் மூன்று மாதங்களாக ஈரானில் சிக்கி உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மீனவ சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனார். 

இந்நிலையில் இந்திய கடற்படை கப்பல் கடந்த நான்கு நாள்களுக்கு முன் ஈரான் சென்றது. இதில் தமிழக மீனவர்கள் 40-க்கும் மேற்பட்ட மீனவர்களை ஏற்ற முடியாத நிலையில் மற்ற 600-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டு தூத்துக்குடி அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஈரான் துறைமுகத்தில் விடுபட்ட 40-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க இந்திய கப்பல் வரும் என்ற நம்பிக்கையுடன் நான்கு நாள்களாக தமிழக மீனவர்கள் துறைமுக வாயிலில் காத்து இருக்கின்றனர். இந்தியா அரசு தங்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.