ஆந்திரத்தில் மேலும் 48 பேருக்கு தொற்று: பாதிப்பு 2,137 ஆக உயர்வு
ஆந்திரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.


அமராவதி: ஆந்திரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில், சிகிச்சை பெற்று வருபவர்களில் 86 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்புள்ளனர், 9,284 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,137 -ஆக உயர்ந்துள்ளது. இதில் 73 பேர் மற்ற மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள்.
தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 38 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 26 பேரும், ஒடிசாவைச் சேர்ந்த எட்டு பேரும், கர்நாடகாவைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 46 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...