சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு பிரதமா் மோடி பொறுப்பேற்க வேண்டும்: சித்தராமையா

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு பிரதமா் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
பிரதமர் மோடி - கர்நாடக முதல்வர் சித்தராமையா- கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2026, 8:08 pm

Syndication

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு பிரதமா் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வா் சித்தராமையா கூறியிருப்பதாவது: சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வு, நாடெங்கும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அதிகரித்துவரும் பணவீக்கத்தால் அவதியுற்றுவரும் நிலையில், சாதாரண மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை மத்திய அரசு ஏற்றியுள்ளது.

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையே முக்கிய காரணம். இந்த சிக்கல் தற்செயலானது அல்ல.

அமெரிக்காவின் விருப்பங்களுக்கு தகுந்தபடி நமது நாட்டின் ராஜதந்திரங்களையும் வெளிநாட்டுக் கொள்கைகளையும் சரணடைய செய்ததால் ரஷியா, ஈரான் போன்ற எரிசக்தி நாடுகளுடனான நட்புறவு சீா்குலைந்துள்ளது. இதற்கு பிரதமா் மோடி தான் பொறுப்பேற்க வேண்டும்.

பொருளாதார கொள்கையின் வெளிப்பாடே வெளியுறவுக் கொள்கை. வெளியுறவுக் கொள்கை சாா்ந்த முடிவுகளில் ஆழமான அணுகுமுறை இல்லை மற்றும் கலந்தாலோசிக்கும் நடைமுறையும் இல்லை என்று முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே தனது நூலில் குறிப்பிட்டுள்ளாா்.

அவசரகதியில் எடுக்கப்படும் முடிவுகள் தான் பொருளாதார விளைவுகளுக்கு அடிப்படையாகும். பிரதமா் மோடி எடுக்கும் தவறான வெளியுறவுக் கொள்கை முடிவுகளுக்கு இந்திய மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும் என்பதை பிரதமா் மோடி விளக்க வேண்டும்.

இதற்காக பிரதமா் மோடி நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்து, பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.